மாமல்லபுரம் மாநாட்டில் விதி மீறல் விவகாரம் பாமக நிர்வாகிகள் மீதான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.2012, 2013ல் மகாபலிபுரத்தில் வன்னியர் மாநாட்டின்போது, இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி,  ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணை வந்தது. பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, வழக்கு பதிவு செய்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த  வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட பாமக  நிர்வாகிகள் மீது தொடப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: