சென்னை: சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல அலுவலகத்தில் பேருந்துகளை நிறுத்தி செல்ல வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மணலி காமராஜர் சாலையில் உள்ள சிபிசிஎல் மற்றும் மீனாட்சி திரையரங்கம் பேருந்து நிறுத்தங்களுக்கிடையே உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம்-2 (மணலி) பேருந்து நிறுத்தம் கூடுதல் பேருந்து நிறுத்தமாக அறிவிக்கப்படுகிறது. எனவே, இனி அந்த வழியே இயக்கப்படும் அனைத்து சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளும் (தடம் எண் 44, 44சி, 56டி எக்ஸ்ன், 56டி, 56 டபிள்யு, 121 சி, 121 டி, 164) நேற்று முதல் இரு மார்க்கத்திலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல உத்தரவிடப்படுகிறது.