சென்னை: விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி நடத்தினர். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது.