சென்னை: தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துணை செயலாளர் சந்தர மோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலர்களாக ஓ.பொட்டிபட்டி விஜயகுமார் ரெட்டி, கோ.இரஞ்சினி மணியன், திருநாவுக்கரசு, சி.டி.ஆறுமுகம், எம்.பி.மருதமுத்து ஆகிய 5 பேரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பரம்பரை சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்து ஆணையிடுகிறது.