காமராஜர் 120வது பிறந்தநாளில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி முறை கருத்தரங்கம்: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: தமிழகத்தில் காமராஜர் ஆட்சி முறை கருத்தரங்கம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:  காமராஜர்  ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு  செய்து பாராட்டுகிறார்கள். எனவே, காமராஜரின் 120வது  பிறந்தநாளில் (ஜூலை 15ம் தேதி) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ்  கமிட்டிகளும் அன்றைய தினத்தில் ‘காமராஜர் ஆட்சி முறை’ என்கிற தலைப்பில்  கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல,  நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில்  முன்னின்று இத்தகைய கருத்தரங்குகளை நடத்த உள்ளனர். காமராஜர்  பிறந்தநாளன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும்  உபகரணங்கள் வழங்குகிற வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: