நாமக்கல்: நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று (03.07.2022) நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது, திருக்கோயில் மற்றும் திருக்கோயிலை சுற்றி உள்ள சுற்றுப் பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.