அண்ணாநகர்: அண்ணாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 15 வார்டுகளிலும் கொரோனாவை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது. அண்ணாநகர், 8வது மண்டலத்தில் உள்ள வில்லிவாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.