சென்னை: ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் காபி ஷாப்பில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2019ல் நவம்பர் 19ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 2 பேரிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த அயோலுவா டேவிட் அடேபாகின் (20), ஒலுகு ஒலிசேமேகா இமானுவேல் (20) என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.