உடுமலை: மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மின்மயமாக்கும் பணி முடிந்ததையடுத்து, கடந்த மாதம் மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, நேற்று மின்சார இன்ஜினில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பழனியில் இருந்து உடுமலை வழியாக கோவைக்கு, ஆய்வாளர் பொன்னுசாமி மேற்பார்வையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.