திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 27வது வார்டில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல காலமாக ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக பெரியசேக்காடு பகுதியில் வருவாய்த்துறை சார்பில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களின் நில ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.