சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரை கட்டிட பணிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் திறந்த வெளிக்காக மாநகராட்சிக்காக குறிப்பிட்ட அளவில் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதாவது கட்டிடத்தின் மொத்தப் பரப்பில் 10 சதவீத நிலத்தை இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிலத்தை சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் மூலமாக (சிம்டிஏ) சென்னை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும். இந்த இடங்கள் வாகனங்கள் நிறுத்தம் இடமாகவும், சிறிய மைதானம், பூங்காக்கள் போன்றவை அமைக்கவும் பயன்படுத்தப்படும்.