மாதவரத்தில் 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா: சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்

மாதவரம்: மாதவரம் மண்டலம் 27வது வார்டில் ஏராளமானோர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல காலமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பெரியசேக்காடு பகுதியில் வருவாய்த்துறை சார்பில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களின் நில ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா பெரும் பயனாளிகளாக 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரியசேக்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு 30 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: