திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் என் பூமி என் மரம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் என் பூமி - என் மரம் என்ற திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அம்மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்படும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரக்கன்றுகளுடன், அம் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான அட்டைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார்.