சென்னை: எடப்பாடி, ஓபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நேற்று பொறுப்பேற்றார்.அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: நான் அதிமுகவின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அந்த அடிப்படையில் வருகிற பொதுக்குழுவில் அந்த தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, தமிழ் மகன் உசேன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவராக பதவியேற்றார்.