சென்னை: , சார் பதிவாளருக்கு எதிரான லஞ்ச புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஓர் ஆண்டாக பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி., தூங்கிக் கொண்டிருப்பதாக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (70). இவருக்கு கோவை மாவட்டம் குமாரபாளையம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் அபகரித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனருக்கு கடந்த ஆண்டு புகார் அனுப்பினார். புகாரில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அபகரித்துள்ளனர். இந்த மோசடிக்கு கோவை மாவட்ட பத்திரப்பதிவு பதிவாளர் சுரேஷ்குமார், சார் பதிவாளர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் துணைபோயுள்ளனர். போலி வாரிசு சான்றிதழை வாங்கி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலத்தை பதிவு செய்வதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தில் ₹4 லட்சம் குறைத்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் புகார் மீது நடவடிக்கை கோரி நாராயணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.