சென்னை: விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை பல்வேறு ஊடகவியலாளர்கள், விளம்பரம் பெறுவதற்காக, பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து குணமடைந்து தற்போது உடல்நிலை தேறிவருகிறார். அவரது உடல்நிலை தொடர்பான காணொலியால், ஆஸ்பத்திரியில் இறந்து போனார் என்று சொல்லும் அளவிற்கு கூட சென்று விட்டனர்.