சென்னை: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் வரும் 27ம்தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அது ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.