சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்குவதற்குள் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் நெல்வாய் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000 நெல்மூட்டைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படாததால் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இது போன்ற நிலை இனி ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.