உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு விஜயகாந்த் நன்றி

சென்னை: உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தொலைபேசி வாயிலாகவும், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், வி.கே.சசிகலா, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் நண்பர்கள், தேமுதிக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: