தாம்பரம்: தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: ‘‘தாம்பரம் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் பிரதிமாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது ‘‘என் நகரம், என் பெருமை; என் குப்பை என் பொறுப்பு; என்ற உணர்வோடு பொது இடங்களில் குப்பைகள் போடுவதை தடுத்திடவும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என 100 சதவீதம் பிரித்து வழங்கிடவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் விழிப்புணர்வு பணிகள் 15 இடங்களில் நடைபெற உள்ளது.