மன்னார்குடி: மன்னார்குடியில் 12 அடி குழியில் விழுந்த பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் இரவு முழுவதும் தவித்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரைமணிநேரம் வரை போராடி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூன்றாம்தெரு மற்றும் இரண்டாம் தெரு இடையே பயன்படுத்த படாத நாராசுரம் சந்து உள்ளது. இந்த சந்தில் சுமார் 12 அடி ஆழமுள்ள குழி உள்ளது. அண்மையில் பெய்த மழைகாரணமாக அக்குழியில் பாதியளவு மழை நீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அந்த சந்து வழியாக வந்த பசு மாடு ஒன்று நிலை தடுமாறி குழிக்குள் விழுந்து விட்டது.