திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 3வது அலகில் பழுது சரிசெய்யப்பட்டு உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று 2வது அலகில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.