தென்காசி: மேலகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் முதல் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் மாணவர்களுக்கானவிழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கவிதா தலைமை வகித்தார். குற்றாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோமதிநாதன், ரத்னபால் சாந்தி, அமுதா, குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, பெண்கள் பாதுகாப்பு மைய நிர்வாகி ஜெயராணி மற்றும் மேலகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம் பேசினர்.