சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை சேப்பாக்கம், தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1999-2000ம் ஆண்டு தமிழ்நாட்டில் உழவர் சந்தை என்கிற கனவு திட்டம் கலைஞரால் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.