பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கிருஷ்ணமராஜாகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் மணி (51). இதில், கோரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாதன். இவரது தந்தை பெயரில் உள்ள 89 சென்ட் விவசாய நிலத்தை பெயர் மாற்றம் செய்ய பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜமாபந்தியில் மனு செய்திருந்தார். இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டிருந்தது. பட்டா பெயர் மாற்றம் செய்து தர ₹10 ஆயிரம் தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாகவும், இருப்பினும் பணம் தர விருப்பம் இல்லாத விவசாயி விஸ்வநாதன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.