குன்னூர் பகுதியில் தொடர் மழை: ரேலியா அணை நீர்மட்டம் மளமள உயர்வு

குன்னூர்:குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ரேலியா அணை மளமளவென நிரம்பி வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குன்னூர் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் 43 அடி உள்ள நிலையில் தற்போது 41 அடிக்கு மேல் தண்ணீர் நிறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: