பெரம்பூர்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர் ராதாகிருஷ்ணன் (65). இதன்பிறகும் அவர் தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுடன் சேர்ந்து மின்சாரம் சம்பந்தப்பட்ட பழுதுகளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஓட்டேரியை அடுத்த நம்மாழ்வார்பேட்டை பராக்கா சாலையில் லைன் இன்ஸ்பெக்டர் சாலமன் என்பவருடன் டிரான்ஸ்பார்மர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.