டிரான்ஸ்பார்மர் பழுதுபார்த்தபோது ஷாக் அடித்து ஊழியர் சாவு

பெரம்பூர்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர் ராதாகிருஷ்ணன் (65). இதன்பிறகும்  அவர் தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுடன் சேர்ந்து மின்சாரம் சம்பந்தப்பட்ட பழுதுகளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஓட்டேரியை அடுத்த  நம்மாழ்வார்பேட்டை பராக்கா சாலையில் லைன் இன்ஸ்பெக்டர் சாலமன் என்பவருடன் டிரான்ஸ்பார்மர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் ஷாக் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் தலைமைச் செயலக காலனி போலீசார் சென்று ராதாகிருஷ்ணனின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: