சென்னை: நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுது பார்க்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட அறிக்கை: நெம்மேலியிலுள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது பார்க்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்குநேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.