சென்னை: கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை, கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200 மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் காவேரி, கல்லூரி பேராசிரியர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.