சென்னை: திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி பணி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது.