சென்னை: தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கியவர் அகமது. இவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்ஸி ஒரு படத்தில் நடித்து வந்தனர். இந்த படத்துக்கு ஜனகணமன என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. 20 சதவீத படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சில காரணங்களால் இந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வேறொரு கதையை எழுதியுள்ள அகமது, அதில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கிறார். ஜனகணமன படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை இந்த படத்துக்காக ஜெயம் ரவி ஒதுக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியிருந்தார்.