ஆவடி: அக்னிபாதை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஆவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அக்னி பாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து, 4 ஆண்டுகளுக்கு பின் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் 21 வயது முடிந்தவர்கள் ராணுவத்தில் சேரமுடியாதா, கல்வித்தகுதி பாதிக்கப்படாதா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.