பெரம்பூர்: கொளத்தூரில் டாஸ்மார்க் கடையில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி விழுந்தது. சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் நேற்று இளைஞர்கள் சிலர் கூட்டமாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பார் ஊழியர்கள், ‘மெதுவாக பேசுங்கள், எதற்காக ரகளை செய்கிறீர்கள்’ என்று அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், பார் ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.