அக்னிபாத் போராட்டம் எதிரொலி; தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தம்.!

சென்னை: அக்னிபாத் போராட்டம் எதிரொலியால் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு (Bharath Bandh) முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதனால் சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும், அடுத்த அறிவிப்பு வரும்வரை நடைமேடை டிக்கெட்டுகள் (Platform tickets) வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரயில்வே சொத்துக்கள் சேதமாவதை தவிர்க்கவும், ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு பயணிகளையும் பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: