அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில், குற்ற சம்பவங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில், துணைஆணையர் விஜயகுமார், அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்காக வந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளிடம் ஒலிப்பெருக்கி மூலம் வழிப்பறி, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் அத்துமீறல் உள்ளிட்டவைகளை தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாacடுகள், போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது, சிறுமிகள் மீதான பாலியன் வன்கொடுமை, பெண் வன்கொடுமை போன்றவை குறித்து விளக்கம் அளித்தார்.