சமயபுரம் கோயிலில் ஜூலை 6ல் குடமுழுக்கு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆகமவிதிபடி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி திருச்சி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜூலை 6ம் தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. இதை தொடர்ந்து, காலை 6.45க்கு மேல் 7.25க்குள் கடக லக்னத்தில் கோயிலில் புதிய கிழக்கு ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: