அரூர்: அரூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. குறைந்தளவு தண்ணீர் தேவைப்படும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. தற்போது அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 35 மூட்டை முதல் 40 மூட்டை வரை கிடைக்கும். கோழிகள் மற்றும் கால்நடை தீவனத்திற்கும், உணவிற்கும், சத்துமாவு தயாரிப்பிலும் அதிக அளவில் பயன்படுவதால்,