விராலிமலை: அன்னவாசல் அருகே தொடர்ந்து பெய்த மழையால் 40 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீர் சூழப்பட்டு நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பெரியகுளம் பரம்பவயல் என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையினால் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீர் சூழப்பட்டு முழு பயிர்கள் நீரில் மூழ்கியது. இதில் சில ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நிலத்தில் இருந்து மேல் எழும்பி நீரில் மிதக்கிறது.