ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்று மாலை நிறைவு விழா நடந்தது . இதில் மாவட்ட வழங்கல் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ஜோதி தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் வரவேற்றார் , தனி வட்டாட்சியர் லதா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கந்தசாமி , மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் , வட்ட வழங்கல் அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.