மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்

சென்னை: மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் விஜயகாந்த் கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிந்து விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.

Related Stories: