சென்னை: விக்ரம் படம் மூலம் சம்பாதித்த பணத்தால் கடன்களை அடைப்பேன் என கமல்ஹாசன் கூறினார்.அவர் கூறியதாவது:எனது ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள்தொட்டு இன்று வரை நற்பணி இயக்க நண்பர்கள், ரத்ததானம் வழங்கி வருகிறார்கள். உதவி தேவைப்படுவோர் எளிதாக எங்களை தொடர்புகொள்ளும் பொருட்டு, கமல் குருதிக்கொடை குழு என்ற ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதன் மூலம் பொதுமக்கள் ரத்ததானம் பெறலாம். எல்லோரும் முன்னேற வேண்டும் என்றால், பணத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு தலைவர் உங்களுக்கு தேவை. ஒரே நொடியில் ₹300 கோடி சம்பாதிக்க முடியும் என்று சொன்னதும் யாருக்கும் புரியவில்லை. நான் என் மார்பில் அடிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். இப்போது அது வருவதை நீங்கள் பார்க்கலாம். அதாவது விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொல்கிறேன்.நான் வாங்கிய கடனை எல்லாம் அடைப்பேன். மனதுக்கு இணங்கச் சாப்பிடுவேன். என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னால் முடிந்ததைக் கொடுப்பேன். அதன் பிறகு, என்னிடம் எதுவும் இல்லை என்றால், நான் இல்லை என்று சொல்வேன். இன்னும் கொடுக்க எதுவும் இல்லை. பிறருடைய பணத்தைப் பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உதவுவது போல் நடிக்க வேண்டியதில்லை. எனக்கு பெரிய பட்டங்கள் எதுவும் வேண்டாம். நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.