ஸ்ரீதர்மராஜன் கோயிலில் துரியோதனன் படுகளம்

உத்திரமேரூர்:ஸ்ரீதர்மராஜன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள  திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீதர்மராஜன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி கடந்த மாதம் 27ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில், துவங்கிய நாள் முதல் தினந்தோறும் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில், 100 அடி உயரம் கொண்ட பனை மரத்தின் உச்சிவரை மகாபாரதம் சொற்பொழிவு ஆற்றி கொண்டே நாடக கலைஞர் உச்சி வரை ஏரி நடனமாடியபடி தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் பெருநகர் மற்றும் சுற்றி உள்ள கிராமமக்கள் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: