சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே காவிலிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (51). விவசாயி. இவர் தோட்டத்தில் வெள்ளாடுகளை கட்டி வைப்பது வழக்கம். கடந்த 2ம் தேதி பைக்கில் வந்த 2 பேர் இவரது ஆடுகளை திருட முயன்றனர். அப்போது ஆடுகள் சத்தம் கேட்டு நாகராஜ் மற்றும் பொதுமக்கள் திரண்டு அவர்களை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி விட்டார். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் கொட்டக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்த குமார் (40) என்பது தெரியவந்தது.