கொடைக்கானல்: கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் காடை வேட்டையாடியவருக்கு வனத்துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, மான், சிறுத்தை, யானை, கேளையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள், அரியவகை பறவையினங்கள் வசிக்கின்றன. கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில், காடையை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.