ஆவடி: திருநின்றவூர் அருகே மிகவும் பிரசித்திபெற்ற ஆலத்தூர் கிராம தேவதை தும்பகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா தமிழ் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.திருநின்றவூர் ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற 70 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை தும்பகாளியம்மன் கோயில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக கோயில் புனரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனை ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா மேகநாதன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் இணைந்து கோயிலை புனரமைத்து கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் புதிதாக வர்ணம் பூச ஏற்பாடு செய்தனர். அதன்படி கோயில் விமானங்கள் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து யாக குண்டகங்கள் அமைக்கப்பட்டு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. மேலும் நன்னீராட்டுக்கு கும்பங்கள் பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை நடைபெற்ற குள்ளாக திருக்குட நன்னீராட்டு புனித கும்பாபிஷேகம் விழாவில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலத்தூர் கிராம தேவதை தும்பகாளியம்மன், முருகப்பெருமான் மற்றும் ராஜ கோபுரம் ஆகியவற்றில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பின்னர் சிவ ஆகம முறைப்படி தமிழ் வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.