சென்னை: பாஜ ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கோயில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மற்றும் கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜ ஆதரவாளரும்,யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்துக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.