பள்ளிப்பட்டு, ஜூன் 13: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமையில் மாணவர் சேர்க்கை பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. பள்ளி வளாகத்திலிருந்து துவங்கிய பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார்.