திருவொற்றியூர்: மணலியில் நேற்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகரட்சி, மணலி மண்டல அலுவலகத்தில் நேற்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உதவி கமிஷனர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். இதில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்று, தங்கள் வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.