விமான ஊழியர்கள் மிரட்டினர்: பூஜா ஹெக்டே புகார்

சென்னை: விமான ஊழியர்கள் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டு மிரட்டியதாக, நடிகை பூஜா ஹெக்டே புகார் கூறினார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து புறப்பட இருந்தேன். இந்த விமான ஊழியர்கள் என்னிடம் முரட்டுத்தனமாகவும், தரக்குறைவாகவும் நடந்து கொண்டனர். அவர்கள் திமிராகப் பேசியது எனக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஒருகட்டத்தில் என்னை மிரட்டும் தொனியிலும் பேசினர். இதற்கெல்லாம் எந்தக்காரணமும் இல்லை என்பதுதான் உண்மை. வழக்கமாக இதுபோன்ற செயல்களைப் பற்றி நான் வெளியே பேச மாட்டேன். ஆனால், இது வழக்கமான ஒன்றாக இல்லை. இவ்வாறு பூஜா ஹெக்டே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: