பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ்.  முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்காக உறவினர்களான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த லட்சுமணன், பாபு, பன்னீர்செல்வம் (23) குடும்பத்துடன் வந்தனர். நேற்று மாலை பாபு மகன் சபரிவாசன் (9), லட்சுமணன் மகன்கள் மணிமாறன் (10),  ருத்ரன் (7) பன்னீர்செல்வம் ஆகியோர் கண்மாயில் குளித்தனர். அப்போது  ருத்ரன் தவிர மற்ற 3 பேரும் நீரில் மூழ்கி பலி யாகினர்.

Related Stories: